
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசென், மயங்க் மார்கண்டே ஆகியோர் களமிறங்குகின்றனர். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பனுகா ராஜபக்சாவுக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் பிரப்சிம்ரன் சிங் முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அவரைத் தொடந்து களமிறங்கிய மேத்யூ ஷார்ட் ஒரு ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 4 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.