Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; இறுதியில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
IPL 2023: Faf du Plessis and Glenn Maxwell power RCB to 189/9!
IPL 2023: Faf du Plessis and Glenn Maxwell power RCB to 189/9! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 23, 2023 • 05:28 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 32ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 23, 2023 • 05:28 PM

பெங்களூருவிலுள்ள சின்னசாமை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச தீர்மான்னித்து பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Trending

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் களமிறங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட் முதல் பந்திலேயெ விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றி ஆர்சிபிக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் டிரெண்ட் போல்ட்டின் 100ஆவது ஐபிஎல் விக்கெட்டாகவும் இது அமைந்தது. 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஃபாஸ் அஹ்மதும் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆர்சிபி அணி 12 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த டூ பிளெசிஸ் - கிளென் மேக்ஸ்வெல் இணை தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர். 

தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட இந்த இணை 3ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதில் அபார ஆட்டத்தி வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

பின் சிறப்பாக விளையாடி வந்த டூ பிளேசிஸ் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 77 ரன்களைச் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மஹிபால் லாம்ரோர், பிரபுதேசாய், வநிந்து ஹசரங்கா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். இறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த தினேஷ் கார்த்திக்கும் 16 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்ப்ட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பறினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement