Advertisement

எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

ஷர்துல் தாக்கூர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினாலும் எங்களது தோல்விக்கு இந்த இரண்டு தவறுகள் தான் காரணம் என குறிப்பிட்டு ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2023 • 11:00 AM
IPL 2023: Faf du Plessis SLAMS Batters After KKR Beat RCB at Eden Gardens
IPL 2023: Faf du Plessis SLAMS Batters After KKR Beat RCB at Eden Gardens (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் குர்பாஸ்(57) அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்துவிட்டு தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார். 89 ரன்கள் இருக்கையில் ஐந்து விக்கெட் இழந்து கொல்கத்தா அணி மிகவும் தடுமாறி வந்தது. கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்துவிட்டது என்றே கூறலாம்.

அந்த சமயத்தில் உள்ளே வந்து அதிரடியாக கலக்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாகூர் மின்னல்வேக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 29 பந்துகளில் 68 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்ததோடு அணியை சரிவிலிருந்து மீட்டார். 20 ஓவர்கள் முடியும்போது, 204 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி. இந்த இலக்கை சேஸ் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கொல்கத்தாவின் லெக் ஸ்பின்னர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Trending


அதன்பின், 44 ரன்களுக்கு ஆர்சிபி அணியின் முதல் விக்கெட் சென்றது. 96 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகள் பறிபோயின. இறுதியில் 123 ரன்களுக்கு ஆர்சிபி அணி ஆல் அவுட் ஆனது. கடந்த போட்டியில் 16.2 ஓவர்களில் 172 ரன்களை சேஸ் செய்த அணி, இப்படி மோசமாக தோல்வியை தழுவி இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. 

போட்டி முடிந்த பிறகு இந்த தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறுகையில், “நூறு ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு எங்கிருந்தோ வந்த சர்துல் தாகூர் மிக சிறப்பாக விளையாடினார். பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர்ஸ் எங்களை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டனர். ஆரம்பத்தில் சுனில் நரேன் மற்றும் வரும் சக்ரவர்த்தி இருவரும் அபாரமாக வீசினர்.

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது இத்தகைய தோல்விக்கு காரணமாக முடிந்துவிட்டது. இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக நாங்கள் பார்ப்பது, டெத் ஓவர்களில் 25-30 ரன்கள் அதிகமாக கொடுத்து விட்டோம். அடுத்ததாக, பேட்டிங்கில சராசரியாக கூட ஆடவில்லை. மிக மோசமாக விக்கெட்டுகள் இழந்தோம். அடுத்தடுத்த போட்டிகளில் சரி செய்து கொள்வதற்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் சில வீரர்கள் அணிக்கு வருகின்றனர். இது நம்பிக்கை கொடுக்கும் விஷயமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement