Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: கேகேஆருக்கு மேலும் ஒரு பின்னடைவு!

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் லோக்கி ஃபெர்குசன் விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Advertisement
IPL 2023: Ferguson’s injury adds to KKR’s worries!
IPL 2023: Ferguson’s injury adds to KKR’s worries! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 23, 2023 • 09:54 PM

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பல்வேறு அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 23, 2023 • 09:54 PM

ஏற்கனவே மும்பை அணியில் பல நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கொல்கத்தா அணிக்கும் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்ட்ன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் குறைந்தது 3 மாதம் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.

Trending

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, அவரால் குணமாக முடியும். ஆனால், உலக கோப்பை தொடர் நடைபெறம் இந்த தருணத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 7 முதல் 8 மாதம் கிரிக்கெட் பக்கமே திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் உலக கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்பதால், அறுவை சிகிச்சையை வேண்டாம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தள்ளி வைத்துள்ளார். வெறும் சிகிச்சை மட்டுமே செய்து கொண்டு, உலக கோப்பை தொடருக்கு தயாராக ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு எடுத்துள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் கொல்கத்தா அணி மினி ஏலத்தில் முன்பு குஜராத் அணியிடமிருந்து நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபெகுர்சனை டிராஃப்ட் செய்தது. ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியிலிருந்தும் ஃபெகுர்சன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

ஏற்கனவே கெல்கத்தா அணி வங்கதேச வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் ஹசனை ஏலத்தில் எடுத்த நிலையில், அவர்கள் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றுவிட்டு தான் ஐபிஎல்லுக்கு திரும்புவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முக்கிய வீரர்கள் இல்லாமல் கேகேஆர் என்ன செய்ய போகிறது என்ற கலக்கத்தில் அவர்களுடைய ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement