
ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசனில் சிஎஸ்கே அணிக்கு தற்போது ஒரு பெரிய அடி விழுந்திருக்கிறது. கடந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 ஆட்டத்தில் தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றியை பெற்று இருக்கிறது.
இதனால் சிஎஸ்கேவுக்கு இது பிரகாசமான தொடராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் சிஎஸ்கே அணி வீரர்கள் பேட்டிங், பந்துடுச்சு என இரண்டிலும் நல்ல பணியை செய்து வருகிறார்கள். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சீசனை போல் இம்முறையும் சிஎஸ்கே வீரர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி அவரை வாங்கி இருந்த நிலையில், அவர் மீண்டும் காயம் அடைந்திருக்கிறார். இதனால், தீபக் சஹார் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஒரு ஓவர் மட்டும்தான் வீசியிருந்தார்.