
ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயம் காரணமாக வெளியேறுவது பிசிசிஐயும் ரசிகர்களையும் கலக்கம் அடைய செய்திருக்கிறது. முக்கிய வீரர்கள் விளையாடவில்லை என்றால் அது அணியின் செயல் திறனை பாதிக்கும். இதனால் போட்டிகள் எதிர்பார்த்தபடி இருக்காது.
போட்டி மீதான சுவாரசியமும் குறைந்து விடும்.இது வருமானத்தையும் பாதிக்கும். ஏற்கனவே ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட வில்லை.
இந்த நிலையில் தற்போது ஆர் சி பி அணியிலும் முக்கிய வீரர்ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆர் சி பி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் மேக்ஸ்வெல். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டென்னிஸ் ஆடுகளத்தில் ஓடிய போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது போதையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.