
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, நிகோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தை மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து தடுமாறியது. இறுதியில் வழக்கம் போல் ரிங்கு சிங் அதிரடி காட்ட லக்னோ பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார். 19ஆவது ஓவரில் 20 ரன்களை ரிங்கு விளாச கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டன.
யாஷ் தாகூர் போட்ட முதல் 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 4ஆவது பந்து வைடாக போடப்பட்ட நிலையில், அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டன. ஆகையால் கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அதில், 4ஆவது பந்து சிக்ஸர், 5ஆவது பவுண்டரி, கடைசி பந்து சிக்ஸராக அமைய ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை தழுவியது.