Advertisement

ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது விக்கெட்டுகளையும் நூர் அஹ்மத் வீழ்த்தி அசத்தியுள்ளார்.  

Bharathi Kannan
By Bharathi Kannan May 30, 2023 • 01:02 AM
IPL 2023: Noor Ahmad with the much-needed breakthrough for Gujarat Titans !
IPL 2023: Noor Ahmad with the much-needed breakthrough for Gujarat Titans ! (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி எப்போது தான் முடியும் என்று கேட்கும் அளவிற்கு 3ஆவது நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்தன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், அன்று இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியதால் டாஸ் கூட போட முடியவில்லை.

இதன் காரணமாக போட்டி மறுநாள் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 54 ரன்களையும், இளம் வீரர் சாய் சுதர்சன் 94 ரன்களையும் சேர்த்ததன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்களை குவித்தது.

Trending


அதன் பின்னர் கடின இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட வந்தது. ஆனால், 3 பந்துகளிலேயே மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்று ரசிகர்களின் எண்ணம் இருந்தது. ஆனால், ஒருவழியாக மழை விடவே, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

கடந்த 28 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடந்து தற்போது 3ஆவது நாளாக இன்றும் நடக்கிறது. இதில், 15 ஓவர்களில் 171 ரன்கள் தேவை என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. அதன்பஇ சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நான்கு ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது.

இதனால் சிஎஸ்கே அணி எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூர் அஹ்மத் வீசிய 26 ரன்களை எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வேவும் 47 ரன்களில் அதே ஓவரில் தூக்கி அடிக்க முயற்சித்து விக்கெட்டை இழந்தார். இதனால் 72 ரன்களிலேயே சிஎஸ்கே அணி தொடக்க வீரர்களை இழந்தது. இதையடுத்து தற்போது ஷிவம் தூபே மற்றும் அஜிங்கியா ரஹானே இணை விளையாடி வருகின்றனர்.   


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement