
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
இதில் இன்று நடைபெறும் 59ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - பிரப்ஷிம்ரன் சிங் இணை களமிறங்கினர். இதில் தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் என அடுத்தது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.