
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெறுவதால் அனைத்து அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கேன் வில்லியம்சன், டுவை பிராவோ, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் தங்களது அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் தற்போது விடுவிக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. கடந்தமுறை ரூ. 12 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வால், 13 ஆட்டங்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் பஞ்சாப் அணி 6ஆம் இடம் பிடித்தது. இதனால் 2023 ஐபிஎல் போட்டிக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மயங்க் அகர்வால் பற்றி பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “ஒரு பருவத்தில் மோசமாக விளையாடினால் உங்களுக்கு வழங்கப்படும் தொகை உதவிக்கு வராது. அந்த வீரரை விடுவித்து, குறைந்த விலைக்கு அடுத்த ஏலத்தில் வாங்கவோ அல்லது வேறொருவரை தேர்வு செய்யவோ தோன்றும். மயங்க் அகர்வால் நல்ல மனிதர். இந்த விளையாட்டு நல்ல மனிதர்களுக்கானது அல்ல. கேஎல் ராகுலுடன் இணைந்து தொடக்க வீரராக நன்றாக விளையாடினார்.