
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அண்கள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்காக மேத்யூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஷார்ட், 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பத்து ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். அங்கிருந்து 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா மற்றும் கேப்டன் சாம் கர்ரன். 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ஹர்ப்ரீத். 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த சாம் கர்ரனும் 19-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து மிரட்டினார் ஜிதேஷ் சர்மா. ஹர்ப்ரீத் ப்ரார் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் எடுத்தது . அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரன்டோர்ஃப், கேமரூன் கிரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர் என மும்பை அணியின் நான்கு பவுலர்கள் தலா 40 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர்.