
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் பாதி போட்டிகளையும், வெளியூர் மைதானங்களில் மீதி போட்டிகளையும் விளையாட இருப்பதினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோன்று இந்த தொடரில் பல்வேறு முன்னணி வீரர்களும் இடம் பிடித்து விளையாடுவதால் போட்டிக்கு போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. ஆனாலும் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பல்வேறு வீரர்களும் காயமடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறி வருவது தொடர்கதை ஆகியுள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரை தவறவிட்டுள்ள வேளையில் இந்த ஐபிஎல் தொடரானது ஆரம்பித்து இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெங்களூரு அணியை சேர்ந்த வீரர் ஒருவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.