
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சில அணிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளதால், அவர்களுக்கான மாற்று வீரர்களையும், மாற்றுத் திட்டங்களையும் அணி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அதேபோல் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்ததால், மீண்டும் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சமகால கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த நட்சத்திர வீரர்களான வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருமே அடிப்படை தொகைக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளால் வாங்கப்பட்டனர். இதனால் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் "ஃபேப் 4"ல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.