
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று நடைபெற்றுவரும் 57ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் 29 ரன்களில் ரோஹித் சர்மாவும், இஷான் கிஷன் 31 ரன்களிலும் என அடுத்தடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.