
ஐபிஎல் தொடரின் 16அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் - நாராயன் ஜெகதீசன் இணை களமிறங்கினர். இதில் ஜெகதீசான் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் நிதீஷ் ராணா 5 ரன்களிலும், ஷர்துல் தாக்கூர் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் மற்றும் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.