Advertisement

ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 19, 2024 • 21:21 PM
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடும் முயற்சியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அஜிங்கியா ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். 

Trending


இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கியா ரஹானே 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 3 ரன்களுக்கும், அதிரடி வீரர் சமீர் ரிஸ்வி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜடேஜாவுடன் இணைந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரவீந்திர ஜடேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் ரவி பிஷ்னோய் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்ட கையோடு 30 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலியும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன், கடைசி பந்திலும் பவுண்டரி அடித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைக் குவித்தது. லன்கோ அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement