Advertisement

ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan November 26, 2023 • 19:29 PM
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது தோனிக்கு கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடுவித்திருந்தது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Trending


அந்த வகையில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் அம்பத்தி ராயுடு மட்டும் ஓய்வினை அறிவித்து வெளியேறியுள்ளார். அவரை தவிர்த்து வெளிநாட்டு வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிஸாண்டா மஹாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களாக பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணி அடுத்த சீசனுக்கான ஏலத்தில் ஆறு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அதில் மூன்று வெளிநாட்டு வீரர்களையும், மூன்று இந்திய வீரர்களையும் தேர்வு செய்ய சென்னை அணிக்கு உரிமை உள்ளது என்று கூறப்படுகிறது.

அதோடு இந்த 8 வீரர்களை தவிர்த்து மற்ற அனைவரது மீதும் நம்பிக்கை வைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் அவர்களை தக்க வைத்துள்ளது. தற்போதைக்கு வெளியான தகவலின் படி சென்னை அணியிடம் கைவசம் கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் இருப்பதால் அவர்கள் நல்ல வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெளியேற்றப்பட்ட 8 வீரர்களை தவிர்த்து தற்போதைய சென்னை அணியில் தோனியின் தலைமையில் 18 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 

 

சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்கள்: மகேந்திரசிங் தோனி, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, ஷேக் ரஷித், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மொயின் அலி, நிஷந்த் சிந்து, அஜய் மெந்தால், ராஜ்வர்தன், தீபக் சஹார், மகீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, சமர்ஜித் சிங், துஷர் தேஷ்பண்டே, மதீஷ பதிரனா.

சிஎஸ்கே அணியில் நீக்கப்பட வீரர்கள் - பென் ஸ்டோக்ஸ் (16.20 கோடி), அம்பதி ராயுடு (6.7 கோடி), கைல் ஜேமிசன் (1 கோடி), டிவைன் ப்ரீடோரியஸ் (50 லட்சம்), பகத் வர்மா (20 லட்சம்), சுப்ரான்ஷு சேனாபதி (20 லட்சம்), சிசாண்டா மகாளா (50 லட்சம்), ஆகாஷ் சிங் (20 லட்சம்).


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement