
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது தோனிக்கு கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடுவித்திருந்தது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் அம்பத்தி ராயுடு மட்டும் ஓய்வினை அறிவித்து வெளியேறியுள்ளார். அவரை தவிர்த்து வெளிநாட்டு வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிஸாண்டா மஹாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.