Advertisement
Advertisement
Advertisement

சீசன் முழுவதும் நாங்கள் கணிக்க முடியாத ஒரு அணியாகவே செயல்பட்டு வந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

இன்றைய ஆட்டத்தில் முதல் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷடம். ஏனெனில் பவுலிங்கில் நாங்கள் நினைத்தது போல் எல்லாம் அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Advertisement
சீசன் முழுவதும் நாங்கள் கணிக்க முடியாத ஒரு அணியாகவே செயல்பட்டு வந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சீசன் முழுவதும் நாங்கள் கணிக்க முடியாத ஒரு அணியாகவே செயல்பட்டு வந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 27, 2024 • 02:26 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 27, 2024 • 02:26 PM

அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்கள் கேகேஆரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

Trending

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்துடன் 52 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 10.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இந்த வெற்றி என்பது முற்றிலும் விரிவான ஒன்று. இதுபோன்ற ஒரு செயல்பாட்டத்தை தான் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் எதிர்பார்த்தோம். அவர்கள் சரியான சந்தர்ப்பத்தில் எழுந்து நின்று இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய உணர்வை வெளிப்படுத்துவது கடினம். இந்த சீசன் முழுவதும் நாங்கள் கணிக்க முடியாத ஒரு அணியாகவே செயல்பட்டு வந்தோம். 

இப்போது நாங்கள் நிறைய விஷயங்களை நினைத்து பெருமை கொள்ள முடியும். இன்றைய ஆட்டத்தில் முதல் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷடம். ஏனெனில் பவுலிங்கில் நாங்கள் நினைத்தது போல் எல்லாம் அமைந்தது. நிச்சயம் ஹைதராபாத் அணிக்கும் பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும். ஏனெனில் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் அவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement