Advertisement

மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!

மயங்க் யாதவைப் தனது அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2024 • 21:01 PM
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியோ விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்விகள், 3 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending


இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக பங்கேற்காமல் இருந்துவரும் மயங்க் யாதவ், நாளைய போட்டியில் விளையாடும் பட்சத்தில் அது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிகப்பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மயங்க் யாதவ் குறித்து பேசிய லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், மயங்க் யாதவைப் பொறுத்தவரை, அவர் அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்க்கான எங்களது பிளேயிங் 12இல் நிச்சயம் இடம்பெறுவார். அவர் தற்போது நன்றாக இருப்பதுடன், மீண்டும் பந்துவீசுவதற்கு தயாராகவும் உள்ளார்” என தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் நாளைய போட்டியில் மயங்க் யாதவ் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய மயங்க் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக் இந்த 6 விக்கெட்டுகளையும் இரண்டு போட்டிகளில் கைப்பற்றினார். அதேசமயம் சராசரியாக 150+ கிமீ வேகத்தில் பந்துவீசும் திறனை கொண்டுள்ளதால் அவரது வருகை லக்னோ அணிக்கு உத்வேகமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement