
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின் ரஹானே - ஜடேஜா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இதில் ரஹானே 36 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜடேஜா - மொயீன் அலி கூட்டணி இணைந்து அடுத்த சில ஓவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் அதிரடியாக விளையாடிய மோயின் அலி, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து கையோடு 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக் இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் தோனி ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸரை விளாசி மிரளவைத்தார்.