Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2024 • 21:27 PM
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து மூன்றாபது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். 

Trending


அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 78 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சாம் கரண் பந்துவீச்சில் பிரப்ஷிம்ரன் சிங்கின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடும் முயற்சியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இறுதியில் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் டிம் டேவிட் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement