Advertisement

பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்!

வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் நாங்கள் முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 08, 2024 • 13:40 PM
பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்!
பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், பட்லர் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களிலு, ஷுபம் தூபே 25 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Trending


இருப்பினும் தொடர்ந்து தனி ஆளாக போராடிய சஞ்சு சாம்சன் 86 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரோவ்மன் பாவெல், டோனவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ராஜஸ்தான் அணி  20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த், “இன்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டவிதம் அருமையாக இருந்தது. குறிப்பாக இறுதிக்கட்ட ஓவர்களில் அவர்களின் செயல்பாடானது சிறப்பாக இருந்ததுடன், அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டிகளிலிருந்தும் நாங்கள் காற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறோம். 

வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் நாங்கள் முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கிறது. குல்தீப் யாதவ் எப்போதுமே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்று முடியும் என்று எதிர்பார்த்தோம். அதேபோன்று நெருக்கமாகவே சென்று முடிந்துள்ளது. இருப்பினும் 200 ரன்களில் அவர்களை கட்டுப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement