Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 13, 2024 • 21:16 PM
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டியில் ஷிகர் தவான் விளையாடாத காரணத்தில் சாம் கரண் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார். 

இதையடுத்த் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதர்வா டைடே - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பேர்ஸ்டோவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதர்வா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதர்வா டைடே தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கும், கேப்டன் சாம் கரண் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் நட்சத்திர வீரர் ஜிதேஷ் சர்மா - ஷஷாங்க் சிங் இணை அணியை சரிவிலிருந்து மீட்டுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங்க் சிங் இப்போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜித்தேஷ் சர்மாவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களை எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கையளித்த லியாம் லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் கேசவ் மகாராஜ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement