Advertisement
Advertisement
Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ரிஷப் பந்த்!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 3000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 12, 2024 • 22:44 PM
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ரிஷப் பந்த்! (Image Source: Google)
Advertisement

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இந்த அணியில் டி காக் 19 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

ஆனால் அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அர்ஷத் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

Trending


இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களையும், அர்ஷத் கான் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் டேவிட் வார்னர் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த பிரித்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஃபிரெசர் மெக்கூர்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அணியின்ன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினார். 

இந்நிலையில் இப்போட்டியில் 9 ரன்களை கடந்ததன் மூலம் ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தனது 3000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 3000 ரன்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2570 ரன்களைச் சேர்த்து இப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்

  • ரிஷப் பந்த் - 3020*
  • டேவிட் வார்னர் - 2570
  • ஸ்ரேயாஸ் ஐயர் - 2382
  • விரேந்திர சேவாக் - 2375


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement