Advertisement
Advertisement
Advertisement

நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம்!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம்!
நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 25, 2024 • 02:40 PM

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 12 ரன்களை எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 25, 2024 • 02:40 PM

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன்னுடன் பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். அதன்பின் டிராஸ்விஸ் ஹெட் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

Trending

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரிச் கிளாசென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்பினார். இடஹ்னால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையாடுத்து இலக்கை நோக்கி விலையாடிய ராஜஸ்தான் அணியில் டாம் கொஹ்லர் காட்மோர் 10 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களிலும், நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர் உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய துருவ் ஜுரெலும் 55 ரன்களைச் சேர்த்த போது, அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ஷபாஸ் அஹ்மத், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையருக்கு போட்டிக்கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்திரவிட்டுள்ளது. அதேசமயம் ஷிம்ரான் ஹெட்மையரும் நடுவரின் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், பிசிசிஐ-யின் அபராதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement