
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளதுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, வநிந்து ஹசரங்கா காயமடைந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். முன்னதாக ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ஒப்பந்தம் செய்தது. தற்போது ஹசரங்கா தொடரிலிருந்து விலகியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவை பார்க்கப்பட்டது.