ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகள் தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக இந்த மூன்று அணிகளும் இதுவறைய விளையாடியுள்ள 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கின்றனர். இதனால் இந்த அணிகளின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ள. குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சில போட்டிகளாகவே குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Trending
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் அடுத்தடுத்து தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதன் காரணமாக இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே தரப்பில் இருந்து முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது காயத்தை சந்தித்த ருதுராஜ் கெய்க்வாட், அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய நிலையிலும், அவரால் ரன்களை அடிக்க முடியவில்லை.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் முடிவில் காயம் தீவிரமானதை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்பதையும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. இதனால் இவரின் கேப்டன்சி கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதுள்ள நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர் இல்லாதது பெரும் பின்னடையை ஏற்படுத்தும். ஏனெனில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் அணியின் முதுகெழும்பாக இருந்த நிலையில், தற்சமயம் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளனர். மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராகவும் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now