ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: ரோஹித், பேர்ஸ்டோவ் அதிரடி; டைட்டன்ஸுக்கு 220 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். பின்னர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களில் சூர்யகுமார் யாதவும், 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களில் ரோஹித் சர்மாவும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும் 25 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த நமன் தீர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசியதுடன் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now