ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் - எம் எஸ் தோனி!
துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read
இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் துபே 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களையும், தோனி 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்க்க, சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி, “போட்டியில் வெற்றி பெறுவது எப்போதும் நல்லது. இதுபோன்ற ஒரு போட்டியில் நீங்கள் விளையாடும்போது, நீங்கள் வெற்றி பெற விரும்புகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது. இது முழு அணிக்கும் நம்பிக்கையைத் தருகிறது மற்றும் நாம் மேம்படுத்த விரும்பும் பகுதிகளில் முன்னேற உதவுகிறது.
கிரிக்கெட்டில் விஷயங்கள் உங்கள் வழியில் இல்லாதபோது, கடவுள் அதை மிகவும் கடினமாக்குகிறார் என்பது போல் தெரியும், இது ஒரு கடினமான ஆட்டமாக இருந்தது. பவர்பிளேவைப் பார்த்தால், அது கூட்டணியாக இருந்தாலும் சரி அல்லது சூழ்நிலையாக இருந்தாலும் சரி, நாங்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டோம். அதேசமயம் பின்னர் ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் விரும்பிய தொடக்கத்தைப் பெற முடியவில்லை. மேலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தோம்.
மேற்கொண்டு தவறான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருக்கிறோம். சென்னையில் உள்ள பிட்ச் சற்று மெதுவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நாங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியே விளையாடியபோது, பேட்டிங் பிரிவு சற்று சிறப்பாக செயல்படுகிறது. ஒருவேளை நாம் சற்று சிறப்பாக இருக்கும் விக்கெட்டுகளில் விளையாட வேண்டியிருக்கலாம், இதனால் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களை விளையாட நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றால், நீங்கள் இன்னிங்ஸ் முழுவதும் விளையாடக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். அதேபோல் இன்று வாய்ப்பு பெற்ற ஷேக் ரஷீத் சிறப்பாக விளையாடினார். இது ஒரு ஆரம்பம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now