Advertisement

என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன் - விப்ராஜ் நிகாம்!

தேவைப்படும் போதெல்லாம் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் என்னை நான் ஒரு ஆல் ரவுண்டர் என்றே கருதுவேன் என்று விப்ராஜ் நிகாம் தெரிவித்துள்ளார்.

Advertisement
என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன் - விப்ராஜ் நிகாம்!
என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன் - விப்ராஜ் நிகாம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 21, 2025 • 08:45 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 21, 2025 • 08:45 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். 

Also Read

இந்நிலையில் தன்னை ஒரு ஆல் ரவுண்டராகவே கருதுகிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் வீரர் விப்ராஜ் நிகாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விப்ராஜ், “நான் எப்போது என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன். தேவைப்படும் போதெல்லாம் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும்.  மேலும் இந்தொடரின்  அனைத்து போட்டிகளுமே அழுத்தமும் பதட்டமும் நிறைந்த போட்டியாக இருக்கும்.

அதிலும் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் முன்னிலையில் விளையாடும்போது அது மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் சீனியர்களிடமிருந்து எனக்கு ஆலோசனை கிடைக்கிறது. சீனியர்களிடமிருந்து எங்களுக்கு சில உதவிகள் கிடைக்கின்றன. மேலும் எங்களிடம் லக்னோவைச் சேர்ந்த வீரர்கள் உள்ளதால், அவர்களிடமிருந்து இந்த சூழ்நிலைகள் குறித்து நாங்கள் திட்டமிடலை செய்துவருகிறோம். 

மேலும் ஃபாஃப் டூ பிளெசிஸ் நன்றாக குணமடைந்து வருகிறார், ஆனாலும் அவர் இப்போட்டியில் விளையாடுவாரா என்ற இறுதி முடிவை நிர்வாகம் தான் எடுக்கும்” என்ரு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விப்ராஜ் நிகம் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்த ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்புகாள் அதிகரித்துள்ளன.

Lucknow Super Giants XI: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

இம்பேக்ட் வீரர் - பிரின்ஸ் யாதவ்.

Delhi Capitals XI: அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.

Also Read: LIVE Cricket Score

இம்பாக்ட் வீரர் - ஃபாஃப் டு பிளெசிஸ்/டோனோவன் ஃபெரீரா.
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement