
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய கையுடனும், ஆர்சிபி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கையுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு எம் எஸ் தோனி அளித்துள்ள ஒரு பேட்டியானது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் பேசிய அவர், “நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால், மைதானத்தில் நான் பயனற்றவன் என்று நினைக்கிறேன், ஏனென்றால் அங்குதான் என்னால் இந்த ஆட்டத்தில் நீடிக்க முடிகிறது. மேலும் இது எனக்கு ஒரு சவால், அதுதான் அதை சுவாரஸ்யமாக்குகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளான எனக்கு தோன்றும் வரை விளையாட எனது அணி சுதந்திரம் வழங்கியுள்ளது.