ஐபிஎல் விதிகளை மீறியதாக வருண் சக்ரவர்த்திக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்காத்த நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், கேகேஆர் அணியானது 6ஆவது தோல்வியைத் தழுவி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. இதனால் கேகேஆர் அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் எதிரணி வீரரிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதாமும், ஒரு கரும்புள்ளியையும் பிசிசிஐ அபராதாமாக விதித்துள்ளது.
மேற்கொண்டு வருன் சக்ரவர்த்தியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் அபராதத்தையும் ஏற்றகொண்டதால் மேற்கொண்டு விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ள்து. இப்போட்டியில் வருன் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசிய நிலையில் 18 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் டெவால்ட் பிரீவிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும், மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் டெவால்ட் பிரீவிஸ் 52 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியில் எம் எஸ் தோனி 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now