Advertisement

ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய மெஹ்சின் கான்; ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது லக்னோ!

ஐபிஎல் தொடரில் இருந்து மொஹ்சின் கான் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய மெஹ்சின் கான்; ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது லக்னோ!
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய மெஹ்சின் கான்; ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது லக்னோ! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 23, 2025 • 12:46 PM

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று தொடங்கியது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 23, 2025 • 12:46 PM

இந்நிலையில் இத்தொடருக்கு முன் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதன்பின்  சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதில் அவர் 505 ரன்களையும், 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தி இருந்தார். 

Trending

இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் மாற்று வீரராக நிச்சயம் இடம்பிடிப்பார் என்ற பேச்சுகளும் அடிப்பட்டன. அதற்கேற்ற வகையில் ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேற்கொண்டு எல்.எஸ்.ஜி முகாமில் ஜெர்சி அணிந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவரது பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதிலும் அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு லக்னோ அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. 

முன்னதாக ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.4 கோடிக்கும் மொஹ்சின் கானை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் தொடரில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 307 ரன்களையும், பந்துவீச்சில் 94 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆனாலும் கடந்த சீசனில் அவர் விளையாடிய 9 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது நினைவுக்கூறத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், ஷர்தூல் தாக்கூர்*, ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப்,  ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement