கம்பீர் இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது - ஹர்ஷித் ரானா!
இந்த சீசனில் என்னுடைய செயக்திறனில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா தெரிவித்துள்ளார்.

கம்பீர் இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது - ஹர்ஷித் ரானா! (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன் பேசிய கேகேஆர் அணி வீரர் ஹர்ஷித் ரானா, “அணியில் உள்ள அனைத்து ஊழியர்களும் அடிப்படையில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள், அபிஷேக் நாயர் கூட திரும்பி வந்துவிட்டார். ஆனால் ஆம், கம்பீர் இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. வேறு யாருக்காகவும் இதனை நான் கூறவில்லை, எனக்காக மட்டுமே நான் பேசுகிறேன். நான் தனிப்பட்ட எதையும் பற்றிப் பேசவில்லை.
ஆனால், கௌதம் கம்பீர் அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் விதத்தில் ஒரு மாற்றம் இருக்கும். இருப்பினும் சந்திரகாந்த் பண்டிட், அபிஷேக் நாயர், டுவைன் பிராவோ ஆகியோரும் அப்படி தான் இருக்கிறார்கள். அதானால் நாங்கள் விரும்பும் சூழலைப் பெறுகிறோம். இந்த சீசனில் என்னுடைய செயக்திறனில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. நான் விரும்புவதைப் பெறவில்லை. எனவே அடுத்த ஐந்து ஆட்டங்களில், இந்த சீசனில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன்.
Also Read: LIVE Cricket Scoreஆனால் நான் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் மூலம் விக்கெட்டுகள் மிகவும் முக்கியமானதாகிவிட்டன, ஏனென்றால் இப்போது நாம் உமிழ்நீரைப் பயன்படுத்தலாம். எனவே அது டெத் பவுலிங்கில் நமக்கு உதவுகிறது. அதனால் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செயல்படுத்த தயாராக இருக்கிறன்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ரானா 9 போட்டிகளில் விளையாடி 11 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News