
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற இருந்த ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டி மழையால் முழுமையாக கைவிடப்பட்டதை அடுத்து ரசிகர்களின் போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 17அன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையேயான ஆட்டம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அனைத்து செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் முழு பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர்கள்.