Advertisement

வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்!

அணி மீண்டும் உற்சாகமடைந்துள்ளதாகவும், 2025 ஐபிஎல் லீக் கட்டத்திற்கு வலுவான முடிவைப் பெற மிகவும் உத்வேகத்துடன் இருப்பதாகவும் ஆர்சிபி அணி பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்!
வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 17, 2025 • 02:05 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 17, 2025 • 02:05 PM

இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

அதிலும் குறிப்பாக ஆர்சிபி அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறும். இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், அணி மீண்டும் உற்சாகமடைந்துள்ளதாகவும், 2025 ஐபிஎல் லீக் கட்டத்திற்கு வலுவான முடிவைப் பெற மிகவும் உத்வேகத்துடன் இருப்பதாகவும் கூறிவுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆண்டி ஃபிளவர், “நேற்று மதியம் பெங்களூரில் உள்ள தலைமையகத்தில் நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தினோம், குழு மீண்டும் உற்சாகமடைந்துள்ளது என்றும், லீக் நிலைகளில் வலுவான முடிவைப் பெற அவர்கள் மிகவும் உந்துதலாக உள்ளனர் என்றும் நான் உணர்கிறேன். இடைவேளைக்குப் பிறகு திரும்பி வரும்போது, ​​போட்டியில் இவ்வளவு உத்வேகம் இருந்தபோதிலும், எங்களுக்கு இது ஒரு மோசமான விஷயமாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

மேற்கொண்டு ரஜத் பட்டிதாரின் காயம் குணமடையவும், பில் சால்ட் தனது உடற்தகுதியை மீட்டெடுப்பதற்கும் இந்த இடைவெளி எங்களுக்கு உதவியாக இருந்தது. அதிலும் குறிப்பாக பில் சால்ட் தற்போது பயிற்சியில் சிறறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் கேகேஆர் அணியை எதிரணியாக நாங்கள் மதிக்கிறோம், நிச்சயமாக. கடந்த சீசனில் அவர்கள் ஒரு சிறந்த சீசனைக் கொண்டிருந்தனர். மேலும் அவர்களிடம் மிகவும் ஆபத்தான வீரர்கள் உள்ளனர்.

எனவே அவர்களை வீழ்த்துவதற்கு நாம் நமது ஆட்டத்தில் சரியாகச் செயல்பட வேண்டும், அதுதான் எங்கள் நோக்கம். இடைவேளைக்கு முன்பு நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம், எனவே முக்கிய விஷயம் நாங்கள் மீண்டும் அதே உத்வேகத்துடன் இத்தொடருக்கு திரும்புவது. எனவே நாங்கள் அதிக தூரம் முன்னேறப் பார்க்கவில்லை, KKRக்கு எதிரான அடுத்த ஆட்டத்தைப் பார்க்கிறோம், அதைச் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Royal Challengers Bengaluru XI : பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள்.

Also Read: LIVE Cricket Score

Kolkata Knight Riders XI : சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ரிக் நோர்கியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement