
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் காயத்தில் இருந்து மீண்டு பயிர்சியில் ஈடுபட்டு வருகிரார்.
முன்னதாக இங்கிலாந்து டி20 தொடரின் போது விரலில் காயத்தை சந்தித்திருந்த சஞ்சு சாம்சன் அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ரஞ்சி கோப்பை போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் துறைகளில் தனது உடற்தகுதியை எட்டினார். இதனையடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்கியது.