Advertisement

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 157 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!

ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 157 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 157 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 20, 2025 • 05:10 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 37ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படித்தார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 20, 2025 • 05:10 PM

சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆர்யா இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடிய வந்த பிரியான்ஷ் ஆர்யா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Also Read

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங்கும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்னிலும், நெஹால் வதேரா 5 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து சூயாஷ் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பஞசாப் கிங்ஸ் அணி 114 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இணைந்த ஷஷாங்க் சிங் - மர்க்கோ ஜான்சென் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 31 ரன்களையும், மர்க்கோ ஜான்சென் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் சுயாஷ் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement