Advertisement

ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஏல நடத்துநர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் போது ஏல நடத்துநர் ஹக் எட்மீட்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 12, 2022 • 14:37 PM
IPL Auction 2022: Auction Stops Midway Due To Unfortunate Circumstances
IPL Auction 2022: Auction Stops Midway Due To Unfortunate Circumstances (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 12, 13) நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களம் காண்கின்றனா். 

ஐபிஎல் ஏல நடத்துநராக எட்மியட்ஸ் பணியாற்றுகிறார். ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார். 

Trending


இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் ஏலம் நடைபெற்றபோது ஏல நடத்துநர் ஹக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். வனிந்து ஹசரங்காவை அணிகள் தேர்வு செய்ய மும்முரமாக இருந்தபோது மேடையிலிருந்து எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து ஐபிஎல் ஏலம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏல நடத்துநர் மயங்கி விழுந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement