
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விளையாடவுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை விடுவித்தது. அதன் பின்னர் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தின் போது மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ரூ.9 கோடிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை மீண்டும் ஒப்பந்தம் செய்தது.
ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் மாற்று வீரராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிடில் விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 330 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன் காரணமாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் சமீப காலங்களில் அவர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.