
15ஆவது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், திலக் வர்மா 38* ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஹானே (7), ஸ்ரேயஸ் ஐயர் (10), சாம் பில்லிங்ஸ் (17), ராணா (8) மற்றும் ரசல் (11) ஆகியோர், வெங்கடேஷ் ஐயரை தனியாக போராடவிட்டு விட்டு, வந்த வேகத்தில் விகெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.