ஐபிஎல் 2022: தோனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா வரவேற்புடன் பயிற்சியை தொடங்கியுள்ளது.

IPL: MS Dhoni begins practice with CSK teammates (Image Source: Google)
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.
இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி வரும் 26ஆம் தேதி மாலை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் தான் கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தன.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை முதல் அணியாக சிஎஸ்கே அணி தொடங்கியுள்ளது. சூரத் நகரில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதனாத்தில் தான் அடுத்த 15 நாட்கள் வரை வீரர்கள் இருப்பார்கள் எனத்தெரிகிறது. கேப்டன் தோனி உள்ளிட்ட பல அணி வீரர்கள் நேற்று சூரத் சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்காக ஸ்பெஷல் வரவேற்பு காத்திருந்தது.
சூரத் நகருக்குள் சிஎஸ்கேவின் வாகனம் நுழைந்தவுடனே, சாலையின் இருபுறமும் தோனி, தோனி என ரசிகர்கள் முழக்கமிட்டு, அவரை பார்ப்பதற்காக முயன்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிஎஸ்கே அணி மேலாளர் ரஸல், எங்கு சென்றாலும், சென்னை பசங்களுக்கு அதிகப்படியான பாசம் குவியும் என பதிவிட்டுள்ளார்.
தோனி பேருந்தை விட்டு கீழே இறங்கியதும், அவரை காண கூட்டம் அலைமோதிய காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதே போல இந்தாண்டுக்கான தோனியின் புதிய லுக்கும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு சீசனுக்கும் தோனியின் ஹேர்ஸ்டைல்களும் மாறுபடும். அந்தவகையில் இந்தாண்டு மிகவும் ஸ்டைலாக தோனி காட்சி தருகிறார்.
லால்பாய் காண்ட்ராக்டர் மைதானத்தில் உள்ள பிட்ச்-ன் தன்மையும், மும்பை நகர்களின் மைதான பிட்ச்-களின் தன்மையும் ஒரே மாதிரி இருக்கக்கூடியவை. எனவே இங்கு பயிற்சிகளை பெற்றால், மும்பை ஆட்டங்களை எளிதில் வென்றுவிடலாம் என தோனி தான் இந்த ஐடியாவை கொடுத்திருக்கிறார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News