
IPL will start in last week of March, owners want matches in India: Jay Shah (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12-13 தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐபிஎல் அணி உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
நேற்று ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் ஐபிஎல்லை நடத்துவது குறித்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது ஐபிஎல் 15ஆவது சீசனை இந்தியாவிலேயே நடத்துமாறு அணி உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தனர்.