
IPL2021: Rishabh Pant leads his team to victory in his first match as captain (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, சாம் கரன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், சாம் கரன் 40 ரன்களையும், மொயீன் அலி 36 ரன்களையும் சேர்த்தனர்.