-mdl.jpg)
இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களிடையே ஐபிஎல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மிகப் பெரும் விளம்பர வருவாயை ஈட்டக்கூடியதாக அது உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதில் ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 2043ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு 50 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக அருண் துமால் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐபிஎல் உரிம மதிப்பு 6.2 பில்லியன் டாலரை (ரூ.51 ஆயிரம் கோடி) தொடும் என்று மதிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து பேசிய் அவா், “கடந்த 15 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டி கடந்து வந்த பாதையையும், தற்போது ரசிகா்களிடம் அதற்கு இருக்கும் மதிப்பையும் பாா்க்கையில், வரும் 2043-இல் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.15 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறேன்.