பிசிசிஐயின் பாரம்பரியமிக்க தொடர்களில் ஒன்று இராணி கோப்பை ஆகும். ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வாங்கும் அணியும், உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து இதர இந்திய அணிகளும் இடம்பெறுவார்கள். இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் இராணி கோப்பை தொடர் நடைபெறவில்லை
கடந்த 2020ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, அந்த ஆண்டு நடைபெறவிருந்த இராணி கோப்பை தற்போது நடைபெறுகிறது. இதே போன்று 2021 -2022 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணி பங்கேற்கும் இராணி கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சௌராஷ்டிரா அணி வீரர்கள், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.