Advertisement
Advertisement
Advertisement

இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவுட்!

மும்பை அணிக்கு எதிரான இரானி கோப்பை ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களில் ஆல் அவுட்டானது, முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Advertisement
இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவு
இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவு (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 04, 2024 • 01:23 PM

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 04, 2024 • 01:23 PM

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Trending

அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது சர்ஃப்ராஸ் கானின் இரட்டை சதத்தின் மூலமும், அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 537 ரன்களைக் குவித்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 223 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் அஜிங்கியா ரஹானே 97 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையும் சேர்த்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து அசத்தியதுடன் 191 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருக்கு துணையாக விளையாடிய துருவ் ஜூரெல் 93 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தவிர்த்து சாய் சுதர்ஷன் 32 ரன்களையும், இஷான் கிஷான் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை அணி தரப்பில் ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து மும்பை அணியானது 121 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement