
Ireland win the second T20I and level the series 1-1 (Image Source: Google)
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்ம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், ஷும்பா - ரியான் பர்ல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்டன் ஷும்பா 46 ரன்களையும், ரியான் பர்ல் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கெட்கேட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.