
கடந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்கு முன், 14 கோடி கொடுத்து கேன் வில்லியம்சனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக தக்கவைத்தது. வில்லியம்சனுக்காக ரஷித் கானையே தூக்கியெறிந்த அந்த அணி, தற்போது 16ஆவது சீசனுக்கு முன், வில்லியம்சனையும் தூக்கியெறிந்துள்ளது. இதனால், அந்த அணி, வரும் 23ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்தில் புதுக் கேப்டனாக வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சன் ரைசர்ஸ் அணிக்கு வில்லியம்சனுக்கு அடுத்து, நிகோலஸ் பூரன்தான் கேப்டனாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், அவரையும் அந்த அணி விடுவித்துள்ளது. இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் யாரை வாங்கி கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து, முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார்.
அதில், “சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட மயங்க் அகர்வால்தான் பொருத்தமானவராக இருப்பார். அந்த அணிக்கு அதிரடி ஓபனர் தேவைப்படுகிறார். அதனையும் இவரால் பூர்த்தி செய்ய முடியும். அணியை சிறப்பாக வழிநடத்தும் தகுதி இவரிடம் இருக்கிறது. கேப்டன்ஸி அழுத்தங்களையும் இவரால் சிறப்பாக சமாளிக்க முடியும்.