Advertisement

ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த இர்ஃபான் பதான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.  

Advertisement
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த இர்ஃபான் பதான்!
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த இர்ஃபான் பதான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2025 • 08:16 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 6 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2025 • 08:16 PM

இதனால் இனி வரும் போட்டிகள் எந்த அணிகள் வெற்றிபெற்று இந்த பட்டியலில் முன்னேற்றம் காணும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற தனத கணிப்பை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான கணித்துள்ளார். அதேசமயம் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை இந்த பட்டியலில் அவர் சேர்க்காதது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு நல்ல அணியாகத் தெரிகிறது. அவர்கள் சுழல் மந்திரத்தை மீண்டும் கொண்டு வந்து வெற்றி பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் ஆடுகளத்தில் இன்னும் கொஞ்சம் திருப்பம் இருக்கும். அவர்கள் தங்கள் பேட்டிங்கையும் வலுப்படுத்தியுள்ளனர். அஷ்வின், ஜடேஜா மற்றும் நூர், இந்த மூவரும் விளையாடினால், உங்களுக்கு 12 ஓவர்கள் மிகவும் உறுதியானது.

அதன் பிறகு அவருக்கு பதிரானாவிடமிருந்து நான்கு ஓவர்கள் உள்ளன. பந்து வீச்சாளர்கள் போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள், அதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய அடுத்த அணி மும்பை இந்தியன். கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் நிலைமை மாறிவிட்டது.

அவர்கள் புதியவர்களாகத் தெரிகிறார்கள், நாங்கள் பார்த்தபடி, இது இரண்டாவது சீசன் என்பதால் கேப்டன் மீது அவ்வளவு அழுத்தம் இல்லை. ஜஸ்பிரித் பும்ரா விரைவில் குணமடைந்தால், பந்து வீச்சாளர்களில் டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இருப்பார்கள். உங்களுக்கும் ரோஹித்தின் அனுபவம் இருக்கிறது, சூர்யா முழுமையாக ஃபார்ம் திரும்பினால், இந்த அணியில் விளையாடும் லெவனில் ஒன்றுக்கு மேற்பட்ட மேட்ச் வின்னர்கள் இருப்பார்கள்.

அடுத்த அணியாக நான் ஆர்சியைத் தேர்வு செய்வேன். ஏனெனில் இந்த முறை ஆர்சிபி கடந்த ஆண்டு சாம்பியன் அணியான கேகேஆரில் ஒரு பகுதியாக இருந்த பில் சால்ட்டைக் கொண்டு வந்துள்ளது. அவரது அனுபவம் ஆர்சிபி அணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். மேற்கொண்டு விராட் கோலியுடன் அவரது ஒருங்கிணைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த அணியில் ரஜத் படிதர் புதிய கேப்டன், ஆனால் விராட் மற்றும் பிற வீரர்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கும்.

அதனால் அவர் அதைச் சமாளிப்பார் என்று நான் நினைக்கிறேன். முக்கிய விஷயம் பந்துவீச்சு, அங்கு அனுபவம் இருந்தால் வேலை எளிதாகிவிடும் என்று நினைக்கிறேன். அதற்கேற்ற வகையில் ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் படிதரின் வேலையை எளிதாக்குவார்கள். இதுதவிர்த்து அவர்களிடம் லியாம் லிவிங்ஸ்டோன், டின் டேவிட் போன்று ஃபினிஷர்கள் உள்ளனர். அதானல் அவர்களை நான் மூன்றாவது அணியாக தேர்வுசெய்வேன். 

இந்த பட்டியலில் நான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும் சேர்ப்பேன். அவர்களிடம் பவர்பிளேயில் விளையாட ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கேஎல் ராகுல் உள்ளனர். அவர்களுடன் அக்‌ஷர் படேலும் பேட்டை வீசி வருகிறார். நீங்கள் பார்த்தால், டெல்லி அணி 3-4 சிறந்த மேட்ச் வின்னர்களைக் கொண்டுள்ளது. எல்லா அணிகளிலும் இல்லாத இரண்டு உயர்தர சுழற்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

அவர்களிடம் மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார். முதல் இரண்டு ஓவர்களையும் கடைசி இரண்டு ஓவர்களையும் அவரிடமிருந்து நீங்கள் பெறுவீர்கள். முகேஷ் குமாரும் இருக்கிறார், அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர், அவர் ஸ்டம்புகளுக்கு அருகில் பந்து வீசுகிறார்.  மேற்கொண்டு அதிக யார்க்கர்களை வீசும் நடராஜனும் இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் தகுதி பெறவில்லை என்றால் நான் ஏமாற்றமடைவேன். எனவே அவர்கள் தான் எனது நான்காவது அணி” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement