
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 6 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
இதனால் இனி வரும் போட்டிகள் எந்த அணிகள் வெற்றிபெற்று இந்த பட்டியலில் முன்னேற்றம் காணும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற தனத கணிப்பை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான கணித்துள்ளார். அதேசமயம் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை இந்த பட்டியலில் அவர் சேர்க்காதது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு நல்ல அணியாகத் தெரிகிறது. அவர்கள் சுழல் மந்திரத்தை மீண்டும் கொண்டு வந்து வெற்றி பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் ஆடுகளத்தில் இன்னும் கொஞ்சம் திருப்பம் இருக்கும். அவர்கள் தங்கள் பேட்டிங்கையும் வலுப்படுத்தியுள்ளனர். அஷ்வின், ஜடேஜா மற்றும் நூர், இந்த மூவரும் விளையாடினால், உங்களுக்கு 12 ஓவர்கள் மிகவும் உறுதியானது.